Tuesday 21 April 2009

இந்தியா காலனி கலாச்சாரத்திற்கு கட்டு பட்டு முன்னூறு வருடங்கள் இருந்தது.இப்போது மெதுவாக காலணி கலாச்சாரம் தலை தூக்கு கிறது. இதுவும் மேற்கில் இருந்து வந்ததுதான். புஷ் மீது ஷூ வீசப்பட்ட பின் உலகளாவிய அங்கீகாரம் கிடைத்து விட்டது போல் பலரும் வீச தொடங்கிவிட்டனர். இங்கே சிதம்பரம் மீது காலனி வீசி இந்த நல்ல காரியத்தை தொடங்கி உள்ளனர். அடுத்தது ஒரு எம் பி. மேல் .. சிறப்பாக செயல் படாத அரசியல்வாதி செருப்பால் அடித்தாலாவது ஏதாவது செய்வாரா என்ற எதிர்ப்பார்த்து அடிக்கிறார்கள் போல.
ஏதோ ஒரு ஒட்டு போட்டோம் .. தேர்தலில் யாரோ ஜெயித்தார்கள் நாம் நம் வேலையே பார்போம் என்ற மக்களின் மன நிலை கொஞ்சம் மாறி விட்டது போல் தோன்றுகிறது. தலைவர்களின் வசீகரத்தை பார்த்தோ, கூட்டத்தில் கலந்து பொழுதை போக்கவோ வந்த மக்கள் கூட்டம் தற்போது குறைந்து விட்டதாகவே தெரிகிறது. நாட்டின் அரசியல் தன்னை , தன் குடும்பத்தை நேரடியாக பாதிப்பதாக ஒரு சாரார் உணர்ந்து விட்டனர் .அதனால் தன் ஒரு வோட்டில் உள்ள முக்கியத்துவம் உணர்ந்து அதற்குரிய பிரதிபலனை எதிர்பார்க்க ஆரம்பித்து விட்டனர் இந்திய வாக்காளர்கள். இந்த பிரதிபலன் தேர்தல் நேரத்தில் பணமாக , தேர்தல் முடிந்ததும் சொந்த காரியங்களுக்காக என்று பல ரூபத்தில் கிடைக்கிறது.ஒன்றும் கிடைக்க வழி இல்லாதவர்கள் செருப்போடு வெளியே வருகிறார்கள். செருப்படி காரணம் தனிப்பட்ட நபரை பொறுத்து அமைகிறது. புஷ்க்கு இராக் பிரச்னை. சிதம்பரத்திற்கு சீக்கியர் பிரச்சனை. ஆனால் முகம் தெரியாத எம் பிக்கு சாதரண இஸ்கூல் வாத்தியார் அனுப்பிய செருப்பு ராக்கெட் தான் சூப்பெர்.
ஆனால் இதையும் நம் அரசியல் தலைவர்கள் அழகாக சமாளிப்பார்கள். உதாரணத்துக்கு அத்வானி மேல் ஷூ வீசினால் " இதை ராமர் பரதனுக்கு தந்த ராமர் பாதுகையாக எடுத்துக்கொள்கிறேன் " என்பார். கம்யூனிஸ்டுகள் சைனா மேக் செருப்பு என்றால் எவ்ளவ்வு அடி வேண்டுமானாலும் வாங்கி கொள்வார்கள்.
ஆனால் செருப்படி எல்லாம் நம் அரசியல்வாதிகளுக்கு ஒன்றும் உறைக்காது என்று வாக்காளர்கள் புரிந்துகொள்ள வேண்டும். அவர்களை வீழ்த்த உள்ள ஒரே ஆயுதம் பட்டன் தான்.தேர்தல் வாய்ப்பு வரும்போதெல்லாம் பட்டன் அழுத்துங்கள். ஆனால் அழுத்தும் முன் யோசித்து அழுத்துங்கள். உங்கள் ஒரு வோட்டு எம் பி யை மட்டும் தேர்ந்து எடுக்கப்போவதில்லை. நாட்டின் தலை விதியை நிர்ணயிக்கும் ஐந்து வருட ஆட்சியை நிர்ணயிக்க போகிறது. எனவே தவறாமல் பட்டன் அழுத்துங்கள். கூடவே எப்போதும் செருப்பு போடுங்கள். பாட்டா ஷோ ரூம் இருக்கவே இருக்கிறது. எல்லோருக்கும் வாய்ப்பு கிடைக்கும். யாருக்கு தெரியும். எல்லோரும் செருப்படிக்க ஆரம்பித்தால் ஓட்டு போட பட்டன் வேண்டம் செருப்படியே போதும் என்று சட்டம் வந்தாலும் வரும்.

2 comments:

  1. //ல்லோரும் செருப்படிக்க ஆரம்பித்தால் ஓட்டு போட பட்டன் வேண்டம் செருப்படியே போதும் என்று சட்டம் வந்தாலும் வரும். //

    ஒரு படத்தில் வடிவேலு பஞ்சாயத்து பஞ்சாயத்தா அடி வாங்குவார்!
    அல்லகைகள் கேட்கும்
    ”எப்படினே தாங்குறிங்க”

    டே இப்ப்டி அடி வாங்கிகிட்டே ஒரு நாள் தேர்தல்ல நிப்பேன், இவனுஅலும் பாவப்பட்டு நமக்கு ஓட்டு போட்டுவானுக, அப்புறம் நான் நந்தான் மந்திரி”

    என்பார்.

    அது போல நடக்காதே!

    remove word verification

    ReplyDelete
  2. நல்ல பதிவுங்க

    நான் 49 க்கு போடலாம்னு இருக்கேன்

    ReplyDelete