Friday 24 April 2009

இனப்படுகொலை




இலஙகை போர் உச்சத்தை எட்டி இருப்பதாக தகவல்கள் வெளியாகின்றன.தமிழ் மக்களை விடுதலை புலிகள் கேடயமாக பயன் படுத்துவதாகவும் இதனால் உயிர் பலிகள் அதிகமாகவும் உள்ளதாக இலங்கை அரசு தெரிவிக்கின்றது. கொத்து குண்டுகள் மூலம் கொத்து கொத்தாக படுகொலை மேற்கொள்வது பற்றி மற்ற நாடுகள் பெரிதாக கவலைப்பட்ட மாதிரி தெரியவில்லை. கண்டனங்கள் மற்றும் போர்நிறுத்த கோரிக்கைகள் வைத்தால் நம் கடமை முடிந்தது என்று உலக நாடுகள் இருக்கின்றன. தெற்கு ஆசியா ஜாம்பவான் என கூறிக்கொள்ளும் இந்திய பேருக்கு அதிகாரிகளை அனுப்பி போர் நிறுத்தம் செய்ய கோருகிறது. இங்கு உள்ள அரசியல்வாதிகள் இந்த பிரச்னையை வைத்து தேர்தல் சடுகுடு விளையாடுகின்றனர்.


போர் நேரத்தில் பின்பற்ற பட வேண்டிய ஜெனீவா ஒப்பந்தம் எல்லாம் கிலோ என்ன விலை என்று கேட்கிற நிலைமை வந்து விட்டது.அப்பாவி மக்கள் ரத்தம் தோய்ந்த உடம்புடன் கூட்ட கூட்டமாக வெளியேறும் படங்கள் பத்திரிக்கைகளில் வெளியாகின்றன. இந்த விவகாரத்தில் மூக்கை நுழைத்து சமரசம் செய்ய எந்த நாடும் உண்மையான அக்கறை கொண்டு செயல்படாதது கொடுமை. எந்த ஒரு நாட்டிற்கும் எந்த காரணத்திற்க்காகவும் தன் சொந்த மக்களை கொல்ல உரிமை இல்லை. இதற்கும் யூகோஸ்லாவியா , இந்தோனேசியா , மியன்மார் நாட்டில் நடப்பதற்கும் எந்த வித்யாசமும் இல்லை. சொல்ல போனால் இலங்கையில் இருபது வருடமாக நடந்து வரும் இனப் படுகொலை போல் எங்கும் நடந்தது இல்லை. இதற்க்கு ஒரு இணக்கமான தீர்வு காணாமல் நம்ம ஊர் அரசியல் வியாதிகள் தொப்புள் கொடி உறவு , தமிழ் ரத்தம் என்று கூவுகிறார்கள். இங்கே இருக்கும் தமிழன் பிரச்னை தீர்க்க இவர்களால் முடியவில்லை. இவர்கள் எங்கே இலங்கை தமிழனை காபாற்ற போகிறார்கள்.
இலங்கை ஏதோ இன்னொரு நாடு, அதன் இறையாண்மையில் நாம் தலை இடக்கூடாது என்பதெல்லாம் சரிதான். ஆனால் கூட்டம் கூட்டமாக அப்பாவி மக்கள் கொல்லப்பட்டால் தட்டி கேட்பது நம் தார்மீக உரிமை. எங்கோ இருக்கும் அமெரிக்காவால் உலகின் எந்த மூலையில் நடக்கும் விவகாரத்திலும் புகுந்து தன்கருத்தை நிலை நாட்ட முடிகிறது. இந்தியாவின் காலடியில் இருக்கும் இலங்கை யை கொஞ்சம் கட்டு பாட்டில் வைக்க ஏன் நம்மால் முடியவில்லை ?

Tuesday 21 April 2009

இந்தியா காலனி கலாச்சாரத்திற்கு கட்டு பட்டு முன்னூறு வருடங்கள் இருந்தது.இப்போது மெதுவாக காலணி கலாச்சாரம் தலை தூக்கு கிறது. இதுவும் மேற்கில் இருந்து வந்ததுதான். புஷ் மீது ஷூ வீசப்பட்ட பின் உலகளாவிய அங்கீகாரம் கிடைத்து விட்டது போல் பலரும் வீச தொடங்கிவிட்டனர். இங்கே சிதம்பரம் மீது காலனி வீசி இந்த நல்ல காரியத்தை தொடங்கி உள்ளனர். அடுத்தது ஒரு எம் பி. மேல் .. சிறப்பாக செயல் படாத அரசியல்வாதி செருப்பால் அடித்தாலாவது ஏதாவது செய்வாரா என்ற எதிர்ப்பார்த்து அடிக்கிறார்கள் போல.
ஏதோ ஒரு ஒட்டு போட்டோம் .. தேர்தலில் யாரோ ஜெயித்தார்கள் நாம் நம் வேலையே பார்போம் என்ற மக்களின் மன நிலை கொஞ்சம் மாறி விட்டது போல் தோன்றுகிறது. தலைவர்களின் வசீகரத்தை பார்த்தோ, கூட்டத்தில் கலந்து பொழுதை போக்கவோ வந்த மக்கள் கூட்டம் தற்போது குறைந்து விட்டதாகவே தெரிகிறது. நாட்டின் அரசியல் தன்னை , தன் குடும்பத்தை நேரடியாக பாதிப்பதாக ஒரு சாரார் உணர்ந்து விட்டனர் .அதனால் தன் ஒரு வோட்டில் உள்ள முக்கியத்துவம் உணர்ந்து அதற்குரிய பிரதிபலனை எதிர்பார்க்க ஆரம்பித்து விட்டனர் இந்திய வாக்காளர்கள். இந்த பிரதிபலன் தேர்தல் நேரத்தில் பணமாக , தேர்தல் முடிந்ததும் சொந்த காரியங்களுக்காக என்று பல ரூபத்தில் கிடைக்கிறது.ஒன்றும் கிடைக்க வழி இல்லாதவர்கள் செருப்போடு வெளியே வருகிறார்கள். செருப்படி காரணம் தனிப்பட்ட நபரை பொறுத்து அமைகிறது. புஷ்க்கு இராக் பிரச்னை. சிதம்பரத்திற்கு சீக்கியர் பிரச்சனை. ஆனால் முகம் தெரியாத எம் பிக்கு சாதரண இஸ்கூல் வாத்தியார் அனுப்பிய செருப்பு ராக்கெட் தான் சூப்பெர்.
ஆனால் இதையும் நம் அரசியல் தலைவர்கள் அழகாக சமாளிப்பார்கள். உதாரணத்துக்கு அத்வானி மேல் ஷூ வீசினால் " இதை ராமர் பரதனுக்கு தந்த ராமர் பாதுகையாக எடுத்துக்கொள்கிறேன் " என்பார். கம்யூனிஸ்டுகள் சைனா மேக் செருப்பு என்றால் எவ்ளவ்வு அடி வேண்டுமானாலும் வாங்கி கொள்வார்கள்.
ஆனால் செருப்படி எல்லாம் நம் அரசியல்வாதிகளுக்கு ஒன்றும் உறைக்காது என்று வாக்காளர்கள் புரிந்துகொள்ள வேண்டும். அவர்களை வீழ்த்த உள்ள ஒரே ஆயுதம் பட்டன் தான்.தேர்தல் வாய்ப்பு வரும்போதெல்லாம் பட்டன் அழுத்துங்கள். ஆனால் அழுத்தும் முன் யோசித்து அழுத்துங்கள். உங்கள் ஒரு வோட்டு எம் பி யை மட்டும் தேர்ந்து எடுக்கப்போவதில்லை. நாட்டின் தலை விதியை நிர்ணயிக்கும் ஐந்து வருட ஆட்சியை நிர்ணயிக்க போகிறது. எனவே தவறாமல் பட்டன் அழுத்துங்கள். கூடவே எப்போதும் செருப்பு போடுங்கள். பாட்டா ஷோ ரூம் இருக்கவே இருக்கிறது. எல்லோருக்கும் வாய்ப்பு கிடைக்கும். யாருக்கு தெரியும். எல்லோரும் செருப்படிக்க ஆரம்பித்தால் ஓட்டு போட பட்டன் வேண்டம் செருப்படியே போதும் என்று சட்டம் வந்தாலும் வரும்.