Thursday 19 February 2009

ஆத்தா நான் ஜெயிலுக்கு போறேன்


சமீபெத்திய பத்திரிக்கை செய்தி.கைதிகளுக்குள் ஒரு தலைவர் தேர்ந்து எடுக்கபடுவார் .. கைதிகள் குறைகள் தீர்க்க அவர் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்.


இதன் நோக்கம் என்னவாக இருக்கும் என்று யோசித்தபோது .. கைதிகளுக்கும் போலீஸ் அதிகாரிகளுக்கும் இடையில் ஒரு பாலமாக இருந்து செயல்பட நல்ல தலைமை பண்பு கொண்ட ஒருவர் உதவுவார் .. இதனால் சிறைகளில் பிரச்னைகள் குறையும்..சிறைகள் அமைதி பூங்காவாக திகழும்..



ஓபனிங் நல்லாத்தான் இருக்கு.ஆனா வேலியில் போகிற எதையோ வேட்டியில் விடுகிறார்களோ என்ற பயமும் வருகிறது.


ஏற்கனவே அரசியல் சாக்கடை கல்லூரிகளில் ஓடி இப்போது பள்ளிஅளவிலும் பரவி கொண்டு உள்ளது. பொதுவாக நம் நாட்டில் தலைமை பதவிகள் எல்லாமே போட்டி பொறாமை களுக்கு உட்பட்டவை. எனவே சிறைகளில் பதவிகள் ஏற்படுத்தப்பட்டால் அவை நெகடிவ் ஆன விளைவுகளை ஏற்படுத்துமோ என அஞ்ச தோன்றுகிறது.


நம் நாட்டில் எந்த தேர்தல் அமைதியாக நூறு சதவீதம் நியாயமாக நடக்கிறது.? அதுவும் குற்றம் செய்து தண்டனையை அனுபவித்து திருந்தி வெளியில் வர வேண்டிய கைதிகள் மத்தியில் தேர்தல்கள் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும்? புதிய சட்டம் ஒழுங்கு பிரச்னைகளை அவை தோற்றுவிக்காதா? கட்ட பஞ்சயத்துகள் நடக்காதா?திரும்ப ஜெயிலுக்கு போக வேண்டும் என்ற எண்ணத்தை ஊக்கு விக்காதா ?இப்பதே சிக்கன் முட்டை போட்டு நல்ல சாப்பாடும் போடுகிறார்கள்.புழல் போன்ற நவீன சிறைகளில் மேம்படுத்த பட்ட வசதிகள் உள்ளன.



அய்யா அரசியல் பெரியோர்களே, அதிகார மன்னர்களே ஒரு முறைக்கு நூறு முறை யோசித்து உருப்படியாக இதை செய்யுங்கள்.

4 comments:

  1. நம்ம அரசியல்வாதிகளெல்லாம் அடிக்கடி ஜெயிலுக்கு போறாங்க இல்ல? உள்ளார அவங்களுக்கு போர் அடிக்காதா? உள்ளேயும், ஒரு அரசியல், தேர்தல், பிரச்சாரம், கூட்டணி, கட்சி & கூட்டணி மாற்றம் அப்படி எல்லாம் இருந்தா, நல்லா பொழுது போகும் இல்லையா? அதனால இதெல்லாம் கண்டுக்காம போய்கினே இரு சூனா பானா!

    டவுட்டு தங்கவேலு: "ஒரு வேளை தலைமரவா இருக்கற அரசியல்வாதிகளுக்கு வைக்கிற ட்ராப் ஆ இருக்குமோ இது?"

    ReplyDelete
  2. அதனால ஒன்னும் தப்பில்லைங்க

    அங்க அவங்களுக்கு ஒரு தலைவர் கண்டிப்பா இருப்பாருங்க.யாரும் தேந்தெடுக்காமையே.ஒரு மோசமான ஒருத்தன் தலைவனா இருப்பதை விட இவங்களா பாத்து தெர்ந்தெடுத்துக்கரது மேல்.

    மற்ற வெளிநாடுகள்ல இருக்க சிறைச்சாலையோட சம்பந்தப்படுத்தி பாக்கும் போது நம்மளுது தரம் கம்மிதாங்க.

    ReplyDelete
  3. நன்றி கார்த்திக். ஜெயில் தேர்தல் நல்ல முறையில் நடந்து நோக்கம் நிறைவேறினால் சந்தோசம். மாறாக அங்கும் கலவரங்கள் உருவாக இது காரணமாக கூடாது என்பதே என் கருத்து.

    ReplyDelete
  4. நன்றி மேக்ஸ் . .சிறையில் ஐ ஏ எஸ் படித்து பாஸ் செய்துள்ளார் ஒரு கைதி. அவரை போன்றவர்களுக்கு இது உதவுமா?

    ReplyDelete