Wednesday 4 February 2009

உதச்சது சரியா தப்பா ?



மங்களூர் பப் (அதாங்க நைட் ஓட்டலு) விவகாரத்தில் கருத்து கந்த சாமிகளின் தொல்லை தாங்க முடியவில்லை. ஒரு சாரார் பப் கலாச்சாரம் நமக்கு ஒத்து வராது. ஆக அங்கே ஆட்டம் போட்டவர்களை உதைத்தது சரி என்கிறார்கள்.
ஒரு சாரார் எல்லோருக்கும் எல்லாம் செய்ய சுதந்திரம் உள்ளதால் உதைத்த்து தப்பு என்கிறார்கள் .(முக்கியமாக சமுதாயத்தை பற்றி "ரொம்பவே " கவலை பட்டு கோடிகளில் புரளும் சினிமா ஆசாமிகள் )



முத்தலிக் , மலேகன் எல்லாம் நமக்கு வேண்டாம். பப் பத்தி பேசுவோம்.



"இன்றைய வாலிப, வாலிபி களுக்கு ஓவர் வேலை, ஓவர் டென்ஷன்.. அதனால் பப் ஒரு ரிலாக்ஸ் செய்யும் இடம் ,, மற்றவர்களுக்கு தொல்லை தராமல் நல்லா பழகி நாலு சுவத்திற்குள் கும்மாளம் போட்டால் தப்பு இல்லை ". இது வாதி வக்கீல்.
" எங்க.. நமக்கு பிரச்னை பண்ற ஆளை போட்டு தள்ளினால் சூபெர் ரிலாக்ஸ் என்பதால் கொலை பண்லமா சார்..பப் கலாச்சாரம் கேன்சர் மாதிரி..மூளையை கெடுத்து தப்பு செய்ய தூண்டும் " இது எதிர் தரப்பு வக்கீல்.



யுவர் ஆனர் தீர்ப்பு;


இள வயதில் தண்ணி மற்றும் பலதரப்பட்ட பழக்கங்களை சொல்லி தரும் பப் கலாச்சாரம் தரும் பாதிப்புகள் அதிகம். இந்தியர்களுக்கே உரித்தான தன்னைத்தானே ஒழுங்கு படுத்திக்கொண்டு வாழும் தன்மையை சிதைக்க கூடியது. மேலும் அமெரிக்க இரோப்பிய நாடுகளில் உள்ளது போன்ற யாரையும் சான்று இருக்காத வாழ்க்கை முறை இங்கு இல்லை. நியு கிளியர் குடும்பங்கள் அதிகம் வந்து விட்டாலும் கூட்டு குடும்பம் என்ற அமைப்பு இன்னும் நன்றாக உள்ளதால் மட்டுமே நம் வாழ்க்கை ஒரு அமைப்பில் உள்ளது. இங்கு ஒரு ஆண் தன்னை சுற்றி வாழும் மற்றவர்களுக்கு ஒரு ஒழுக்க முள்ள சகோதரனாய் , கணவனாய் , தகப்பனாய் வாழும் கட்டாயம் உள்ளது. அதே போல் ஒரு பெண் நல்ல சகோதரியாய், மனைவியாய், அம்மாவாய் வாழ வேண்டும். மேலும் நம் குடும்ப முறை முற்றிலும் பெண்களை சார்ந்து உள்ளது. எனவே பெண்களுக்கு பொறுப்பு அதிகமாகவே உள்ளது..ஒழுக்கம் கெட்ட ஆண் அல்லது பெண் சமுதாயத்தில் நல்ல மனிதராக மதிக்க படுவதில்லை. அவர்களால் நல்ல சமுதாயத்தை உருவாக்க முடியாது.



("அட என்னப்பா லெக்சர் அடிக்கறே ! " சீக்கிரம் தீர்ப்ப சொல்லு )



இதோ தீர்ப்பு :



" கொஞ்ச நேரம் ஜாலிக்காக சகதியில் புரளுவதில் தப்பில்லை. ஆனால் வழுக்கி விழுந்து காலம் முழுக்க பன்றிகளாக அலைய வேண்டுமா ? பன்றிகளை யாரும் மதிப்பதில்லை. அவர்கள் சமுதாயத்தின் அருவெறுப்பான அடையாளங்கள்."

4 comments:

  1. நாட்டாம! தீர்ப்ப மாத்தி சொல்லு!

    ReplyDelete
  2. நாங்க சொம்பெல்லாம் வெச்கறது இல்ல . சாரி..

    ReplyDelete
  3. குடிங்குரது நம்ம பாரம்பரியங்க அதுல ஆண் பெண்கிர பேதம் கிடையாதுங்க.
    என்ன பொருத்தவரைக்கும் குடியை கொண்டாடனும்னு சொல்வேன்.
    இது கொஞ்சம் ஹை சொசைட்டிங்கரதால இந்த கலாச்சார காவலர்கள் தட்டிக்கேகுராங்க தங்கள் புகழ் வெளிய தெரியனும்கிரதுக்காக.
    தினமும் கடை முன்னாடி என்னதனை பெண்கள் சரக்க வாங்கி ராவ அடிச்சிட்டு கடுப்பாங்கூட இல்லாம ஸ்டைலா பாட்டல தூக்கி வீசிட்டு போராங்க (அவங்கல பாக்குரப்ப என்ன நானே நெந்துக்குவேன்)அவங்கிட்ட போயி இந்த சட்டெமெல்லாம் பேசச்சொல்லுங்க அடுத்த நொடி நாக்கும் இருக்கது ஓட்டும் உழுவாது.

    // பன்றிகளை யாரும் மதிப்பதில்லை. அவர்கள் சமுதாயத்தின் அருவெறுப்பான அடையாளங்கள்."//

    பன்னியா இருந்து பாத்தாதான் அதன் நியாயம் புரியும்.
    (ஹேராம் டைலாக் கொஞ்சம் மாத்தி)

    ReplyDelete
  4. நன்றி கார்த்திக் . நீங்கள் சொல்வது உண்மை. எங்கள் பகுதியில் காலை ஆறு மணிக்கே சரக்கு கிடைக்கிறது. பெண்கள் சிலரும் வருகிறார்கள். வாழ்க பாரதம்.

    ReplyDelete